News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளியை விரைந்து கைது செய்த 116 காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு :

கொலை வழக்கில் துரிதமாகச் செயல்பட்டுக் குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்த 116 காவல் துறையினருக்குத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் பகுதியில் பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை விரைந்து பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த வழக்கில் துப்பு துலக்கத் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர்கள் சுனில், சுதீர், சுந்தரபாண்டியன், ஜெகநாதன், பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் ராகுல் V கோபால், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் கலாலெட்சுமி ஆகியோர் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் தடய அறிவியல் உதவியுடன் குற்றவாளியை அடையாளம் கண்டு அதிரடியாகக் கைது செய்தனர்.

வழக்கில் சிறப்பாகப் பணியாற்றிய 11 காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 116 காவல்துறையினரின் சேவையைப் பாராட்டும் விதமாக, மாவட்டக் காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் அனைவருக்கும் நற்பணிச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad