கொத்தவரங்காயில் புரதம் நிறைந்துள்ளது.
நீரில் கரையும், சீரணத்திற்கு உதவும் நார்ச்சத்தும், உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு உதவும் நீரில் கரையாத நார்ச்சத்தும் இதில் உள்ளது.
கொத்தவரங்காயில் போலிக் அமிலம் உள்ளதால் இதை கர்ப்பிணிப் பெண்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
இதிலிருக்கும் கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இரும்புச் சத்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.
கொத்தவரங்காய் விதை மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது.
இதை பொடி செய்து உட்கொண்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
உடல் எடையையும் உடல் கொழுப்பையும் குறைக்கும்.
மலச்சிக்கலையும் போக்கும்.
கருத்துக்கள்