News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
சைமன்காலனி கிராமத்தில் கடல் காலநிலை குறித்த தகவலுக்கான புதிய செயலி அறிமுகம் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழில் ஒரு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

அடிக்கடி எழுகின்ற கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக மீனவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

ரிலையன்ஸ் அறக்கட்டளை மீனவர்கள் பாதுகாப்பாக தொழில் செய்வதற்காக கடல் காலநிலை குறித்த தகவல்களை இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்திலிருந்து பெற்று ஒலி வடிவில் மீனவர்களின் அலைபேசி எண்ணிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

தற்போது ரிலையன்ஸ் அறக்கட்டளை “மச்சிலி” என்ற செயலியை அறிமுகப்படுத்தி அப்டேட் செய்து உள்ளது.

அந்த செயலி மூலம் மூன்று நாட்களுக்கான காற்று, அலையின் உயரம், நீரோட்டம், மீன் கிடைக்கும் பகுதிகள் மற்றும் எச்சரிக்கை தகவல்களை பெறமுடியும்.

இதை பயன்படுத்துவதற்கான பயிற்சியானது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சைமன்காலனி கிராமத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் 30 க்கும் மேலான மீனவர்கள் கலந்துகொண்டு தங்கள் அலைபேசியில் play store மூலம் download செய்து பயனடைந்தனர்.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் இந்த செயலியை பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கம் அளித்தனர்.



5

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad