News & Ad contact: 75025 54555
சென்னை - தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.17,527 ஆக உயர்வு: பயணிகள் கடும் அதிர்ச்சி :
தேர்தலை முன்னிட்டு சென்னை - தூத்துக்குடி மற்றும் பெங்களூரு - மதுரை உள்ளிட்ட வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 23) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் பணிபுரியும் வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றச் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
இந்தத் தேவையைக் சாதகமாகப் பயன்படுத்தி, விமானக் கட்டணங்கள் வழக்கத்தை விட பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாகச் சென்னை - தூத்துக்குடி மற்றும் மதுரை இடையிலான விமானக் கட்டணங்கள் ரூ.
4,000 முதல் ரூ.
6,000 வரை இருக்கும்.
ஆனால், தேர்தல் காரணமாக இன்று (ஏப்ரல் 22) இந்தக் கட்டணங்கள் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளன.
தற்போதைய கட்டணம் (ரூபாயில்) சென்னை - தூத்துக்குடி: 17,527 சென்னை - மதுரை: 13,320 பெங்களூரு - மதுரை: 29,397 வாக்காளர்கள் அதிர்ச்சி: ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டதாலும், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுவதாலும் கடைசி நேரத்தில் விமானத்தை நாடிய வாக்காளர்கள், இந்தக் கட்டண உயர்வைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறிப்பாகப் பெங்களூருவில் இருந்து மதுரை செல்ல ரூ.
29,000-க்கு மேல் செலவிட வேண்டியிருப்பது நடுத்தர வர்க்கத்தினரைத் திகைக்க வைத்துள்ளது.
ஒரு வாக்கினைப் பதிவு செய்ய இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவது சாமானிய மக்களுக்குச் சாத்தியமற்றது.
இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் தனியார் விமான நிறுவனங்கள் கட்டணத்தைச் சீராக வைக்கத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விமானக் கட்டண உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு மாற்றாக, தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இன்று இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், பயண நேரத்தைக் குறைக்க விரும்புவோர் விமான நிறுவனங்களின் இந்தத் திடீர் விலையேற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-